Monday, June 29, 2009

பிரபாகரன் தொடர்பான சிறீலங்காவின் கூற்றில் இருக்கும் பொய்த்தன்மைகள்
Thursday, June 4, 2009
குற்றப்புலனாய்வின் அடிப்படையில் ஒரு பெரிய சூட்டுச் சம்பவத்தில் இறந்து கிடப்பவர் மிகச் சிறந்த முறையில் படத்திற்கு நிற்பவர்போல் கிடந்தார் என்பது சாத்தியமற்றதாகும்
அவர் பல தரப்பட்ட மக்களுக்கு பல முகங்கள் கொண்டவர். விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணமானது சிங்கள மக்களுக்குப் பெரு மகிழ்ச்சியையும், தமிழ் ஆதரவாளர்களுக்கு பெரும் கவலையையும், அவரின் இறப்பு இலங்கைக்கு அமைதியைக் கொண்டுவரும் என நினைப்பவர்களுக்கு ஆசுவாசத்தையும் வழங்கியுள்ளது.
அவர் உண்மையில் இறந்துவிட்டாரா? பத்திரிகையாளர்களை அனுமதிக்காததையும், சர்வதேச பகுப்பாய்வுக்கு அனுமதிக்காததையும் பார்க்கும்போது நம்பகத்தன்மை அற்றுப்போகிறது. அரசாங்கத்தின் முதல் அறிக்கையிலேயே நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். பிரபாகரன் போர்க்களத்திலிருந்து அம்புலன்ஸ் வாகனத்தில் தப்பியோடும்போது கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.
அவர் இப்படி ஒரு முட்டாள்த்தனமான காரியத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார். அதற்கு சந்தர்ப்பமே இல்லை. நினைத்துப்பாருங்கள்! சிறீலங்கா இராணுவம், புலிகளின் தலைவரையும், போராளிகளையும் ஒரு சதுரக் கிலோ மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் முடக்கிவிட்டதாகக் கூறியது. அந்தப்பகுதி மிகச் சிறியதும், இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டதுமாகும்.
ஒரு ஈருருளியில் சென்றால்கூட கண்டுபிடிக்கப்பட்டுத் தடுக்கப்படக்கூடிய நிலப்பரப்பு. இந்த அடிப்படையில் அவர்கள் எப்படி அம்புலன்ஸ் வண்டியில் யாரும் அறியாமல் தப்பமுடியும் என்று நினைத்திருக்கக்கூடும். அவர் அப்படியானதொரு சிறிய நிலப்பரப்பிலிருந்து தப்பவேண்டுமாயின் நிலக்கீழ்ப் பாதையிலேயே தப்பியிருக்கலாம்.அதன்பிறகு பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகப் படம் வெளியிடப்பட்டிருந்தது.
முதலாவது கேள்வி:
அவர் அம்புலன்ஸ் வாகனத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவரது உடல் எப்படி ஆற்றங்கரையில் கிடைத்திருக்கும்? இந்தப்படம் செயற்கையானது என்று தெரிகிறது. தலை பிளக்கப்பட்ட நிலையில் முகம் தெளிவாகவும், கண்கள் அகல விரிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இது அவர் கண்களை அடையாளம் காட்டி நம்பவைக்க சிலர் செய்த உத்தியாக இருக்கலாம்.
இது எனக்குச் சில வருடங்களின் முன்னர் டெல்லி அன்சால் பிளாசாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் படம் பல பத்திரிகைகளின் முன்பக்கத்தை நிரப்பியிருந்ததை நினைவு படுத்துகிறது.
அப்படத்தில் தீவிரவாதி கையில் துப்பாக்கியுடன் இறந்திருந்த விதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தது. உடனடியாகவே இப் படம் சோடிக்கப்பட்டு தயார்ப்படுத்தி எடுத்த படம் என்பது விளங்கியது. நான் எத்தனையோ போராளிகளின், மக்களின், இராணுவத்தின் உடல்கள் போர்க்களத்தில் இறந்துகிடந்ததைப் பார்த்திருக்கின்றேன்.
குற்றப்புலனாய்வின் அடிப்படையில் ஒரு பெரிய சூட்டுச் சம்பவத்தில் இறந்து கிடப்பவர் மிகச் சிறந்த முறையில் படத்திற்கு நிற்பவர்போல் கிடந்தார் என்பது சாத்தியமற்றதாகும். தொடர்ச்சியான விசாரணைகளும் இந்த சந்தேகத்தையே வெளிப்படுத்தின.
இதே உணர்வுதான் பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்ட படத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்டது. சந்தேகத்திற்கு அப்பால்கூட இந்தப் படத்தைப் பார்த்தபோது அதில் ஒரு குழறுபடி இருந்தது தெரிந்தது.
முதல் அறிக்கையில் அம்புலன்ஸ் எறிகணை வீச்சிற்கு உள்ளாகி எரிந்து முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. நீங்கள் ஒரு வாகனத்தை உந்துகணையாலோ, எறிகுண்டுகளாலோ தாக்கினால் அது வெடித்துச் சிதறும்.
பிரபாகரன் வாகனத்துள் இருந்திருந்தால் அவர் சிறு துகள்களாகச் சிதறியிருப்பார். அல்லது சதைப்பிண்டமாகவாவது அடிக்கப்பட்டிருப்பார்.இவை அனைத்துமே திட்டமிட்டுச் சோடிக்கப்பட்டவையாகவே தெரிகிறது.
அதற்கப்பால் பிரபாகரனை கருணாவாலும், தயா மாஸ்ரராலும் அடையாளம் காட்டவைக்கப்பட்டது. இது பொலிஸ் பாதுகாப்பிலுள்ள கைதிகள் தரும் வாக்குமூலத்திற்கு ஒப்பானது. இதன்மூலம் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் அரசு தரப்பில் சொல்லப்பட்ட செய்திகள் எதிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
‘பிரபாகரன் ஒருநாளும் உயிருடன் பிடிபடமாட்டார்' என நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். அத்துடன் நான் இன்னுமொன்று சொல்ல விரும்புகிறேன். அப்படி அவருக்கு வேறு வழிகள் இல்லாவிட்டாலும், அவர் தனது உடல்கூட எதிரியிடம் அகப்படவிடமாட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1.அவர் ஒரு சிறந்த இராணுவவியல் மாணவர். அவரது உடல் கிடைத்தால் அதற்கு வெற்றிகொண்ட சிங்கள இராணுவம் எவ்வளவு அவமரியாதைகள் செய்யுமென்பது அவருக்குத் தெரியும். எல்லா வெற்றி பெற்ற இராணுவமும் வரலாறு வழியாக இதையே செய்துள்ளனர்.
எனக்கு இன்னும் ஆப்கான் தலைவர் நஜிபுல்லா தலிபான் இராணுவத்தால் கொல்லப்பட்டு, விளக்குக் கம்பத்தில் தூக்கில் இடப்பட்டு அவரது மூக்குத் துவாரங்களில் சிக்கரட் பற்றவைத்து உடல் எங்கும் அடிக்காயங்களும் காணப்பட்ட நிலையிலேயே இருந்தார்.
நான், கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் பெண் போராளிகளின் உடல்கள் ஆடை களையப்பட்டு அம்மணமாக இழுத்துவந்து சித்திரவதை செய்த காட்டுமிராண்டி சிங்கள இராணுவத்தின் செயல்களை காணொளியில் பார்த்துள்ளேன்.
பலர் பிரபாகரனை வெறுத்துள்ளனர். ஆனால் பிரபாகரனை அனைவரும் புரிந்துகொள்ளல் வேண்டும். அவர் ஒரு அபரிவிதமான பெருமைக்குரியவர். அவர் தனது வாழ்க்கை தமிழ் மக்களின் கௌரவத்தையும், எதிர்காலத்தையும் மீள்நிறுத்தப் போராடுவதில் பெருமையுடையவர்.
அவர், தன் உடல் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு தனது தமிழ் இனத்திற்கு நிரந்தர அவமானத்தையும், கௌரவ இழப்பையும் ஏற்படுத்த ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டார். அவர் சயனைற் அருந்துவதோடு மட்டுமன்று தன்னை மெய்ப் பாதுகாவலர்களால் சுடவைத்தும் தனது இறப்பை உறுதிசெய்திருப்பார். அத்தோடு தனது உடலை சிதறச்செய்து தூள் தூளாக்கி அடையாளமிழக்கச் செய்திருப்பார்.
2.இரண்டாவது காரணமாக அவர் தனது உடல் கண்டுபிடிக்கப்படுவதை ஏன் தவிர்த்திருப்பாரெனில், நினைவுபடுத்திப் பாருங்கள் பிரபாகரனின் அபிமானத்திற்குரிய நாயகனாகிய சுபாஸ் சந்திரபோஸ் இன்றும் உயிருடன் இருப்பதாகவே பலரால் எண்ணப்படுகிறார்.
இந்த முடிச்சானது எதிர்காலத்தில் மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்படாவிட்டால் அவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா என்பது யாராலும் நிரூபிக்கப்படாத இராணுவ இரகசியமாகவே இருக்கும். மக்கள் மனதில் அவர் என்றுமே உயிருடன் இருப்பார்.
அப்படி அவர் இருந்திருந்தாலும் அவரது கொள்கைகள் மக்களால் கொண்டுசெல்லப்படும்.நான் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று நம்பவில்லை. அவரது உயிர் அவரால் மட்டுமே எடுக்கப்படக்கூடியது. அவர் அப்படி தன்னை மாய்த்துக்கொள்வதற்கு தனது தளபதிகளுடன் முடிவு செய்திருந்தால் அந்த நாள் மே 16 ஆகவே இருந்திருக்கும்.
The Weekபத்திரிகையில் எனது கடைசிக் கட்டுரையில்(Cruching Tiger May 3)பிரபாகரனின் அடுத்த செயற்பாடுகளைப் பற்றி நான் எழுதுகையில் ‘அவர் இந்திய தேர்தல்களை மிக அவதானமாக உன்னிப்பதையும் டெல்லி அரசில் மாற்றங்கள் ஏற்படுவதையும் அவதானித்தார்.
அத்தோடு அவர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் வாழ்விற்கான மாபெரும் ஆதரவு ஏற்படுவதையும் பார்த்திருந்தார். அத்தோடு பராக் ஒபாமா எமது பிரச்சினையை சரியாக ஆய்வு செய்வார் என்றும் பார்த்திருந்தார்.' என எழுதியிருந்தேன்.
மே 13ல் சிறீலங்காவின் மனிதாபிமான அவலங்களையிட்டு ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் புலிகள் உடனடியாக ஆயுதங்களைக் களையவேண்டுமென்றும், நூற்றுக்கணக்கான மக்களைப் பலிகொள்ளும் இனஅழிப்பிற்கான எறிகணை வீச்சுக்களை உடனடியாக அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் கூறினார்.
புலிகளின் பேச்சாளரும் ஒபாமாவின் கூற்றிற்கு புலிகள் இணங்குவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் சிறீலங்கா அரசாங்கமானது இதனை நிராகரித்து, பிரபாகரனின் கைப்பிடியில் இருந்த கடைசித்துண்டு நிலத்தையும் பறிப்பதற்கு தனது கொலைவெறித் தாக்குதலை நிறுத்தாது தொடர்ந்தது.
மே 16ல் இந்தியத் தேர்தல் பெறுபேறுகள் வந்தபோது அனைத்து ஊடக பிரச்சாரங்களுக்கும் எதிராக கொங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டது. இதன்மூலம் பிரபாகரனுக்கு எதிரானவர்கள் தங்களது அதிகாரத்தில் மேலும் ஐந்து வருடங்கள் தக்கவைக்கப்பட்டார்கள். அதேபோல் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான வைகோ ஓரங்கட்டப்பட்டார்.
பிரபாகரன் இந்த யுத்தத்தை தனியாக எதிர்கொண்டார். அவருக்கு இந்த யுத்தத்தில் சந்திக்கப்போகும் தனது இழப்புக்கள், போராளிகளின் இழப்புக்கள், புலம்பெயர் மக்களிடம் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்பவற்றை அவர் அறிந்திருந்தார். இது ஒரு பயங்கரமான உண்மையாகும்.
அடுத்த ஐந்து வருடங்களிற்கு இந்தியாவின் மேலாண்மையில் இருக்கும் கொங்கிரஸ் அமைப்போடும் ஆண்மையற்ற சர்வதேச சமூகத்தோடும் மோதுவதென்பதும் தம்மை தக்கவைப்பதும் கடினமானது. இன்றைய சர்வதேச நடைமுறைகளில் குறுகியகாலத்தில் ஈழம் அமைப்பதென்பது சாத்தியப்படாததொன்றாகும்.
சென்றகாலத்தில் பிரபாகரன் ஓரங்கட்டப்பட்டபோது அவர் மீண்டும் அனைத்தையும் அடியிலிருந்தே ஆரம்பித்தார். இதன்மூலமே நான் சொல்கிறேன், அவர் போரைத் தொடர்வாரென்று. ஆனால் கொங்கிரசின் வெற்றியும், தமிழ்நாட்டின் அரசியல் தோல்வியும், சிறீலங்காவின் பிடிவாதப்போரும், அமெரிக்க ஜனாதிபதியின் சொற்களைக்கூட மறுதலிக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் போக்கும் பிரபாகரனை இறுதிவரை யுத்தமிடத் தூண்டியிருக்கலாம்.
எல்லோரும் வாசிக்கவேண்டிய 1964ம் ஆண்டு வெளிவந்த ஆஸ்திரிய எழுத்தாளரான Stefan Zwei‘நேற்றைகளின் உலகம்' நாவலின் முன்னுரையில்Harry Zohn தனது வாழ்க்கை 3 தடவைகள் இரண்டு உலக யுத்தத்திற்கு மத்தியில் ஆரம்பத்திலிருந்து மீளத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
அவர் தனது நாலாவது தடவையாக பிரேசிலில் இந்த நாவலின் பின்னர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். ஆனால் Zweig யும் பிரபாகரனும் நேர் எதிர்க்கொள்கையுடையவர்கள். ஆனால் நான் பிரபாகரனின் மனநிலை மே 16ல் எப்படி இருந்திருக்குமென்று நினைக்கின்றேன்.
எனது கொள்கைக்கு வலுச்சேர்ப்பது என்னவெனில் புலம்பெயர்நாட்டிலுள்ள மக்களில் பலர் தங்களுக்கு வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர்கள் கண்ணீருடன் விடைபெற்றதாகவும் சொன்னார்கள். அதியுயர் தரங்களில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவப்பிரிவு இறந்துவிட்டதாகவும் அல்லது கூட்டாகத் தற்கொலை செய்யப்பட்டதாகவும் அவ் அழைப்பில் சொல்லப்பட்டதாகக் கூறினார்கள்.
மே 16 இந்த உலகத்தில் பிரபாகரனும் அவரது 300 அதிகாரி நிலைப் போராளிகளும் கூட்டுத் தற்கொலை செய்யப்போவதாகவும், தம்மை வெடிக்க வைக்கப்போவதாகவும் உலகம் முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவ இணையத் தளமானது புலிகள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட குண்டு வெடிப்புகளின் சத்தங்கள் மிக அண்மையில் கேட்பதாக அறிவித்திருந்தார்கள்.
இது புலிகள் கூட்டாகச் செய்த தற்கொலைச் சத்தங்களே என்று பொருள்படச் சொல்லியிருந்தார்கள். சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரில் தனது வெற்றியை அறிவித்தவேளையில் மே 17 நண்பகல் விடுதலைப் புலிகளின் வெளியுறவுச் செயலாளரின் அறிக்கையில் இந்த யுத்தமானது ஒரு கசப்பான முடிவை எட்டியுள்ளது. எமது மக்களின் கொடூரப் படுகொலைகளை நிறுத்துவதற்கு எங்களுக்கு ஒரே ஒரு தெரிவே எஞ்சியுள்ளது.
நாம் எமது துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்கின்றோம். இவ் அறிக்கையில் சர்வதேச சமூகத்தின் மௌனத்தைக் கண்டித்தும், சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கிய அவசர அழைப்புக்களை நடைமுறைப்படுத்த சக்தியற்ற சர்வதேச சமூகத்தைச் சாடியும் இருந்தது.
விரக்தி, துக்கம், கசப்பான முடிவு போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த எந்த உதவியும் இன்றி போராடினோம். ஆனால் மக்கள் அழிவுகளை எம்மால் காப்பாற்ற முடியவில்லை என்றும் இருந்தது.
இது ஒரு தற்கொலை அறிக்கை வாசிப்பதுபோன்று இருந்தது. எந்தவிதமான காரணங்களுக்கப்பாலும் பிரபாகரன் மே 17 தற்கொலை செய்திருப்பார் என்பதை நான் நம்பமாட்டேன். பிரபாகரன் சகுனங்களிலும், எண்களிலும் நம்பிக்கை உடையவர். அவர் என்னிடம் முன்பு 8 இலக்கமானது மிகவும் அதிர்ஸ்டமான இலக்கம் என்று கூறியுள்ளார்.அவர் பிறந்ததும் நவம்பர் 26. இதை நான் அறிவித்திருந்தும் அந்த நாட்களில் சிறீலங்கா அரசாங்கம் இதைக் கவனத்தில் எடுக்கவில்லை.
ஆனால் சாள்ஸ் அன்ரனி இவற்றில் நம்பிக்கை குறைந்தவர். இராணுவத்தை கிலிகொள்ளச்செய்த அவரது பல தாக்குதல்கள் 26ம் திகதியிலேயே அமைந்திருந்தன. 2006 ஏப்ரல் 26ல் விடுதலைப் புலிகளின் தற்கொடைக் குண்டுதாரி சரத் பொன்சேகாவைக் குறிவைத்து தாக்குதல் நடாத்தியிருந்தார். சரத் பொன்சேகாவே பிரபாகரனின் வாழ்க்கைக்கால எதிரியாவார்.
பிரபாகரன் இலக்கங்களுடனான நம்பிக்கையைத் தெரிவித்தபோது, நான் Cheiro வைப் படித்திருந்தேன். அவரின் கூற்றின்படி 8ம் இலக்கத்தில் பிறந்தவர்களது வாழ்க்கை அதியுச்ச வெற்றியை அல்லது அதியுச்ச வீழ்ச்சியைச் சந்திக்கும் என எழுதியுள்ளார். மே 18 அதிகாலை 3 மணியளவில் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பா.நடேசன் அவர்களும், சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் புலித்தேவன் அவர்களும் தமது ஐரோப்பியத் தொடர்புகளுக்குத் தொடர்புகொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக தம்மையும், தம்மோடு சேர்ந்த 1000 காயமடைந்த போராளிகளையும், மக்கள் பணியாளர்களையும் அங்கிருந்து வெளியேற்ற உதவுமாறு கோரியிருந்தனர்.
ஆனால் சில மணித்தியாலங்களின் பின்னர் சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சு நடேசன் அவர்களதும், புலித்தேவன் அவர்களதும், அன்ரனியுடையதும் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசாங்கத்தின் துரோகத்தனத்தை குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அவர்களின் கூற்றின்படி சர்வதேசத் தொடர்புகள் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும், சிறீலங்கா இராணுவத்துடன் போரை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு பேசியிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அவர்களின் உத்தரவின்படி நடேசனும், புலித்தேவனும் ஆயுதமின்றி வெள்ளைக்கொடியோடு அருகில் இயங்கிக்கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவினரிடம் சென்றனர்.
ஆனால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இது உண்மையாகும் பட்சத்தில், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இது ஒரு போர்க்குற்றமாகும். சிறீலங்காவின் இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட இறந்த உடலங்களின் படங்களின் எண்ணிக்கை, இந்தப் போரானது ஒரு மாபெரும் இரத்தப்படுகொலையின் பின்னரே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.
மே 18 ல் சிறீலங்கா இராணுவம் சாள்ஸ் அன்ரனியின் உடலத்தின் படத்தை வெளியிட்டிருந்தனர். அதுவரைகாலமும் போரில் விருப்பற்று இருப்பதுபோல் ஒரு பருமனான களைப்படைந்த சாள்ஸ் அன்ரனியின் படங்களையே வெளியிட்டிருந்தனர். இப்போது அவர்கள் இரு படத்தையும் வெளியிட்டிருந்தனர்.
ஒன்றில் உயிருடனும், மற்றொன்றில் உடலமாகவும். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் இரண்டிலும் நீலநிற உடையே அணிந்திருந்தார். அப்படியாயின் அவர்கள் சொல்ல நினைப்பது நடேசன், புலித்தேவன் அவர்களோடு சேர்ந்து சாள்ஸ்சும் பொதுமகன்போல் உடையணிந்து வெள்ளைக் கொடியுடன் வந்திருக்க வேண்டும்.
படங்களில் அவர் சுத்தமாகவும், சவரம் செய்தும், அமைதியாகவும் காணப்படுகிறார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை சிறிது நேரத்தின்பின் நடந்த படுகொலையில் இவர்களின் முகங்கள் முழுமையாக மாற்றமடைந்துள்ளது. எல்லா விடுதலைப் புலிப் போராளிகளும் சீருடைகளையே அணிந்திருப்பார்கள்.
சாள்ஸ் அன்ரனி சண்டையிட்டிருந்தால் அவரும் அப்படியான உடையிலேயே இருந்திருப்பார். ஆனால் இராணுவத்தின் பார்வையில் சாள்ஸ் அன்ரனியும் மற்றவர்களும் பொதுமக்களின் உடைகளில் தற்கொலைத் தாக்குதலுக்கு வந்ததாகவும் கூறினார்கள்.ஆனால் அவரின் உயிருடன் உள்ள படங்கள் இக்கூற்றுக்கு ஆதாரம் சேர்ப்பவையாக இல்லை. ஆனால் அரசாங்கத்திற்கு பிரபாகரனின் உடலத்தின் படத்தை வெளியிடுவதற்கு ஒரு முழுநாள் தேவைப்பட்டிருக்கின்றது.
முன்னர் கூறியபடி பிரபாகரன் தனது படையணியுடன் வெடித்துச் சிதறியிருந்தால் அங்கு யாருமே இருந்திருக்கப் போவதில்லை. அப்படியாயின் அரசாங்கத்திற்கு இந்தப் பிரபாகரனின் ‘இரட்டை' எங்கிருந்து வந்தது. இது எப்படிச் சாத்தியமானது. இதற்கான பதில் சுலபமானது. இராணுவத்திற்கு ஒரு இறந்த உடலத்தைக் காட்டவேண்டிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டால் யாரும் பிரபாகரன் இறந்ததாக நம்பமாட்டார்கள்.
சிறீலங்கா இராணுவம் தம்மைத் தாமே வெடிக்கவைத்து இறந்ததாகச் சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கவும்மாட்டார்கள் அதை இல்லையென்று ஆதாரம் காட்ட பிரபாகரனும் வெளியே தோன்றியிருக்கமாட்டார். ஆகவே அவர்களுக்கு ஒரு உடலம் காட்டப்படுவது அத்தியாவசியமானது. அத்தோடு மே 20ல் சிறீலங்கா பாதுகாப்பு அரசு தனது இணையத் தளத்தில் ‘அவர் எப்படி இறந்தார் என்பதை நாங்கள் வெளியிடப்போவதில்லை' என்று ஒரு ஆச்சரியத்தக்க அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் இந்தக்கதை மேலும் சுவாரசியமானது. விடுதலைப் புலிகள் அன்ரனி பற்றி மௌனமாகவே இருந்தனர். ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தனர். ஆனால் சிலர் விடுதலைப் புலிகள் இந்த வதந்தியை வெல்வதற்கு பிரபாகரன் ஒரு தொலைக்காட்சிச் செவ்வியை வழங்குவதன் மூலமே அவர் உயிருடன் இருப்பதை உறுதிசெய்யமுடியுமென நம்புகின்றனர்.
ஆனால் இப்படி நடந்தால் அவர் தனது போலியை வைத்தே இந்தத் தோல்விக்குரிய போரை நடத்தியதாகவும் கூறுவார்கள். அத்தோடு அவரது அனைத்து அசைவுகளும் சிறீலங்கா புலனாய்வுத்துறையால் கண்காணிக்கப்படும். இது அவர் உயிருடன் இருந்தால்மட்டுமே. ஆனால் இத்தனை குழப்பங்களிற்கும் சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசாங்கத்தை பிரபாகரனின் மரபணு சோதனையையும், அன்ரனியின் மரபணுச் சோதனையையும் கனடாவிலும், ஐரோப்பாவிலும் வாழும் அவரின் சகோதரிகளுடன் ஒப்பிட்டு நிரூபிக்கும்படி வற்புறுத்த முடியும்.
இதன் மூலம் அனைத்துக் குழப்பங்களையும் அடக்கிவிட முடியும். இந்தியாவும், இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், நோர்வே ஆகியோர் இவ் அழுத்தத்தை சிறீலங்கா மீது திணிக்க முடியும்.

நம் சொந்தங்களின் வாழ்வுரிமைக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?
29/06/2009
"ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" - மகிந்த ராஜபக்சேயிடம், ஜூன் 9 ஆம் தேதியன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள்தாம் இவை.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளைநிலங்களை எதற்கும் உதவாத தரிசுநிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை இலட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளிய சூத்திரதாரியான எம்.எஸ்.சுவாமிநாதனின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவார்த்தமான வாக்கியத்தை முதன்முதலில் கூறியவர் டாக்டர்.ஜோசப் மெங்கெல் (Joseph Mengele) என்ற ஜெர்மானியர்.
பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை கலாநிதிப் படிப்பிற்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர். மானுடவியலிலும், மருத்துவத்திலும் பட்டம் பெற்ற ஜோசப் மெங்கெல், ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார்.
1943 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதியன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்திரவதைக் கொட்டடியில் இருந்த "நாடோடிகளுக்கான முகாமில்" (Gypsy Camp) மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1945 ஜனவரி 25 ஆம் திகதிவரை அம்முகாமில் பணியாற்றினார். அந்தக் காலத்தில் அவரால் சிறைக் கைதிகளின் மீது மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் நடத்தப்பட்ட வதைகள் கேட்போர் நெஞ்சம் கலங்கும் குரூரத்தன்மை பொருந்தியவை.
உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டையர்கள் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவரது பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள். அவரது ஆய்வுக்காக சுமார் 1500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர்.
தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார். இதனைப் பல மாதங்கள் தொடர்வார். "மெங்கெல் மாமா.... மெங்கெல் மாமா....!" என்று குழந்தைகள் அவரை வளைய வளைய வரும் ஒரு நாளில் அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்வார். மயக்கமேற்படுத்தும் சாக்லேட்டைக் கொடுத்து அவர்களை மயக்குவார்.
மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இருதயத்தில் அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசியின் மூலம் செலுத்துவார். குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் அவயங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார்.
இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார். குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இதற்காக, பல்வேறு ரசாயனப் பொருட்களை ஊசிமூலம் அவர்களின் கண்களுக்குள் அவர் செலுத்திப் பார்த்தார்.
அதன் விளைவுகளை அவர் ஊன்றிப் படித்தார். இப்படிப்பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்திரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில் அவரது உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளே " "ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" என்பது.
யூத இனத்திற்கு மெங்கெல் செய்த கைங்கரியத்திற்குச் சற்றும் குறையாத அன்றேல் அதற்கிணையான ஒன்றை ஈழத் தமிழினத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஜூலையில் இருந்து செய்யவுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வுகளுக்கு சோதனைச்சாலை எலிகளாகப் பலியாகவிருக்கும் வன்னிப் பெருநில மக்களின் நிலைதான் என்ன?
வட ஈழ மக்களும், அவர்தம் அவலமும்:
இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப்போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டுவிடுகிறது.
2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது. அப்போது வன்னிப் பெரு நிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சத்து 3 ஆயிரம் ஆகும். இவர்களில் சுமார் 38% பேர் வேளாண் தொழிலையும், 18% பேர் உற்பத்தித் துறையையும், 45% பேர் சேவைத் துறையையும் தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
2005 ஆம் ஆண்டின்போது வன்னிப் பெருநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்தி மதிப்பில் (Gross Domestic Product - GDP) வேளாண் துறையில் ஈடுபட்டிருந்த 38% மக்கள் 24.5% பொருள் உற்பத்தி மதிப்பிற்குக் காரணமாயிருந்தனர். உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த 18% மக்கள் 7% மதிப்பிற்கும், சேவைத் துறையில் ஈடுபட்டிருந்த 45% மக்கள் 68% மதிப்பிற்கும் காரணமாக இருந்தனர்.
போர் தொடங்கும் முன்பு - அதாவது 2004 ஆம் ஆண்டில் - வன்னிப்பெருநிலத்தின் 38% குடும்பங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 13 % நெல்லை விளைவித்தன. இலங்கையின் 20% வெங்காயம் அவர்களால் விளைவிக்கப்பட்டது. 7% மிளகாய் உற்பத்தி அவர்களிடம் இருந்தே வந்தது. சுமார் 1000 டன் புகையிலையையும் அவர்களே அந்த ஆண்டில் உற்பத்தி செய்திருந்தனர்.
இலங்கையில் இருந்த ஒட்டுமொத்த செம்மறி ஆடுகளில் சுமார் 20% வன்னிப் பெருநிலத்திலேயே இருந்தன. 60% வெள்ளாடுகள் அங்குதான் இருந்தன. சுமார் 2 கோடி லிட்டர் பால் (இலங்கையின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10%) இங்கு உற்பத்தியானது. 6 கோடி முட்டைகள் உற்பத்தியாயின.
போர் முடிந்த இன்றைய தேதியில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2,62,632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது. 35% பேருக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை.
கடந்த 13 மாதங்களில் 1,40,368 பேர் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பதற்குத் தெளிவான விடையில்லை. மே 27 ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட ஐ.நா.சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2,90,130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,77,000 ஆகக் குறைந்து போயிருந்தது. ஜூன் 15 ஆம் தேதியன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,62,632 என மேலும் குறைந்து போயிருந்தது.
மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27,498 பேர் காணாமல் போயுள்ளனர். இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இல்லாமலடிக்கப்படுவதென்பதன் பின்னணியிலுள்ள பயங்கரம் உறையவைப்பதாக இருக்கிறது. இன்று முகாம்களில் உள்ளவர்களில் 11,873 பேர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். 3,968 பேர் ஊனமுற்றோர்.
இவர்களுள் 57, 293 பேர் குழந்தைகள். அவர்களில் 7,894 பேர் தம் தந்தையரை இழந்தவர்கள். சுமார் 3,100 பெண்கள் கர்ப்பிணிகள். சுமார் 700 பேர் 70 வயதைத் தாண்டிய வயோதிகர்கள்.
எனவே, முகாம்களில் உள்ள மக்களில் 76,934 பேரினால் எவ்விதப் பணியிலும் ஈடுபட முடியாது. 1,85,698 பேரினால் மட்டுமே பணியில் ஈடுபட முடியும். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை 1,34,464 ஆகும். கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை இதிலிருந்து கழித்து விட்டால் பணியில் ஈடுபடக்கூடிய பெண்களின் எண்ணிக்கை 1,31,364 ஆகும். வேலை செய்யக்கூடிய வலு நிலையில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை வெறும் 51,234 மட்டுமே.
அவர்களில் பலர் இன்றும் இராணுவத்தால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்கள் பட்டினியாலும், நோய்களாலும் கடுமையான துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மே 23 ஆம் திகதியயன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா.சபையின் தலைவர் திரு.பான் கீ மூன் சந்தித்தார். "என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை" என்று கூறி அவர் பெரிதும் வருந்தினார்.
சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி திரு. சரத் நந்தா சில்வா " இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். ஐ.நா.சபைத் தலைவர் மெனிக் முகாமுக்கு சென்ற மே 23 ஆம் திகதியன்றே, வவுனியாவில் உள்ள செட்டிகுளம் முகாமில் 66 பேர் மரணமடைந்தனர்.
அவர்களில் 60 பேர் வயோதிகர்கள். 6 பேர் குழந்தைகள். மே 25 ஆம் திகதியில் இருந்து ஜூன் 9 ஆம் திகதிவரை முகாமில் இருந்து வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 62 பேர் மரணமடைந்தனர்.. இவர்களில் 51 பேர் வயோதிகர்கள்.. 11 பேர் பச்சிளம் குழந்தைகள்.செட்டிகுளம் முகாமில் மட்டுமே ஜூன் 7 ஆம் திகதியன்று 14 பேரும், ஜூன் 8 ஆம் திகதியன்று 7 பேரும் இறந்து போயினர்.
இவ்வாறு இறந்தவர்களனைவரையும் பொதுச் சவக்குழியில் புதைப்பதை இலங்கை இராணுவம் தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த அவலம் ஏற்படக் காரணம் என்ன?
மக்களை கிராமங்களில் இருந்து விரட்டியடித்த இராணுவம்:
2007 இறுதியில் வன்னிப் பெருநிலத்தை ஆக்கிரமிப்பதற்கான போரை இலங்கை இராணுவம் தொடங்கியது. போர் தொடங்கிய நாளிலிருந்தே மக்களையும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளையும் அவர்தம் ஊர்களில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை நோக்கி விரட்டுவதே இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையின் போர் உபாயமாக இருந்திருக்கிறது.
2008 ஜூன் மாதத்திற்குள்ளாக மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களை கிளிநொச்சியை நோக்கி விரட்டி அடிப்பதில் இலங்கை இராணுவம் வெற்றி கண்டது. வட ஈழத்தின் கீழிருந்த வவுனியா மாவட்டத்தின் ஒருபகுதியின் மக்களும் கிளிநொச்சியை நோக்கி விரட்டியடிக்கப் பட்டனர். இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் உணவு மற்றும் மருத்துவத்திற்கு முற்றுமுழுதான பொறுப்பாளிகளான நிலைக்கு இதன்வழியாக விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர்.
புலிகள் தங்கள் பலத்தின் பெரும்பகுதியைத் தமது மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களது உணவுத்தேவைக்கும் இருப்பிடத்திற்கும் செலவழிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அவர்களைத் தள்ளுவதன் மூலமாக நெருக்கடியை அதிகரித்து, புலிகளின் போரிடும் வலுவைக் குறைப்பதே இராணுவத்தின் திட்டமாக இருந்தது. 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று கிளிநொச்சி வீழ்ந்தது. வன்னிப் பெருநில மக்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்குள்ளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளும் இலங்கை இராணுவத்தால் வெற்றிகரமாகத் துரத்தி அடைக்கப்பட்டிருந்தனர்.
தென்னிலங்கையில் இருந்து வட ஈழத்திற்கு செல்ல வேண்டிய உணவுப் பொருட்களும், மருந்துகளும் இலங்கை அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. உணவுப் பற்றாக்குறை காரணமாக இந்த மக்களுக்கு இலைக் கஞ்சியைத் தவிர வேறு எதையும் கொடுக்க இயலாத நிலைக்கு விடுதலிப்புலிகள் நிர்வாகம் தள்ளப்பட்டது.
அப்பாவி மக்களின் மீதான இராணுவ எறிகணை மழை:
கிளிநொச்சி வீழ்ந்த பிறகு கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையே உள்ள உடையார்கட்டு கிராமத்தில் கிளிநொச்சியின் மருத்துவமனை இயங்க வேண்டி வந்தது. இந்த மருத்துவமனை மீதும், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்து 20 விநாடிகளில் 40 எறிகணைகளை வீசும் திறனுள்ள பல்குழல் எரிகணை பீரங்கிகளைக் கொண்டும், மிக், கிபிர் மற்றும் எப்-7 விமானங்களைக் கொண்டும் 2009 பிப்ரவரி மாதத்தில் இலங்கை இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.
அப்பாவி மக்களின் மீதான இந்தத் தாக்குதலை நிறுத்தச் சொல்லிப் பல்வேறு சர்வதேச நாடுகளும், ஐ.நா.சபையும் கேட்டுக்கொண்ட பின்னரும் இலங்கை அரசு நிறுத்தவில்லை. இதனைத் தடுக்க இந்திய அரசும் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அகதிகள் முகாம் உருவாக்கமும், வெளியான இராணுவ உண்மைகளும்
போரில் தான் வெற்றி அடைவது உறுதி என்பதை இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதத்தில் உறுதி செய்துகொண்டது.. இதன் பிறகே விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் இருந்துவந்த வன்னிப் பெருநில மக்களுக்கு அகதிகள் முகாம் அமைப்பது என்ற பேச்சை இலங்கை அரசு எடுத்தது.

இதன் பிறகே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து அப்பாவி மக்களை வெளியேற அது அனுமதி அளித்தது. இலங்கை இராணுவத்தின் இந்த ந்டவடிக்கையில் இருந்து, அது போரின் போது அப்பாவி மக்களை எவ்வாறு கையாளுவது என்பதற்காக வகுத்திருந்த திட்டம் வெட்ட வெளிச்சமானது:
1.. அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குள் விரட்டியடிப்பது
2.. விரட்டியடிக்கப்பட்ட மக்களைப் புலிகளைக் கொல்லும் சாக்கில் குண்டுவீசி அழிப்பது; தான் வீசிய குண்டுகளால் இறந்துபோன மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொன்று விட்டார்கள் என்று பரப்புரை செய்வது.
3.. குண்டுவீச்சில் இருந்து தப்பிய மக்களைப் போரின் இறுதி நாட்களில் புலிகளின் 'பயங்கரவாதத்திலிருந்து' மீட்கிறோம் என்ற சாக்கில், முதல் முறையாக வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பது
4.. வெளியேறிய மக்களை முகாம்களில் அடைத்து வைப்பது.
5.. அவர்களில் பணியாற்றும் வலுவுள்ள ஆண்கள் அனைவரையும் புலிகளெனக் குற்றஞ்சாட்டி வதை முகாம்களில் அடைப்பது.
6.. இவ்வாறாக, போரினுள் சிக்கிய தமிழினத்தை ஆண்களற்றதொரு சமூகமாக மாற்றுவது
7.. பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும் அவரவர் ஊர்களில் மீளக் குடியமர்த்தி, உலகத்திடம் நற்பெயர் பெறுவது.
ஏப்ரல் 24 ஆம் தேதியன்று, அகதிகள் முகாம்களுக்குத் தலைவராக, 2006-2008 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவ சேனையின் தலைவராக இருந்த- யாழ் குடா மக்களைத் துன்புறுத்துவதில் பெயர்போன மேஜர்.ஜெனரல்.சந்திரஸ்ரீ நியமிக்கப்பட்டார்.
முடிந்தவரையில் தமிழர்களை வன்னிப்பெருநிலப்பரப்பினுள் வைத்தே அழித்துவிடுவதன் மூலம் அகதிகளாக வெளியேறுபவர்களைக் குறைத்துவிடலாமென்று இலங்கை அரசும் இராணுவமும் திட்டமிட்டன. அத்திட்டத்திற்கிணங்க, ஏப்ரல் 24 ஆம் திகதியில் இருந்து, அப்பாவி மக்களின் மீதான தாக்குதலை இலங்கை இராணுவம் பன்மடங்காக்கி அழித்தொழிப்பைத் துரிதப்படுத்தியது.
இந்த வெறித்தனமான தாக்குதலில் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்படுவதைக் கண்ட விடுதலைப் புலிகள் இயக்கமானது, ஏப்ரல் 26 இல் போர் நிறுத்தத்தை தானே முன்வந்து அறிவித்தது. இலங்கை அரசு அதையும் நிராகரித்தது.
போரை நிறுத்துவதற்கு எதுவும் செய்யாமல் அதை மறைமுகமாக நடத்திய இந்திய அரசு, இலங்கை அரசின் அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஏப்ரல் 27 ஆம் தேதியன்று 100 கோடி ரூபாய் உதவியை அளிப்பதாக அறிவித்தது. ஆனால் அதன் பின்னரே - அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து மே 6 ஆம் தேதிவரை உள்ள கால கட்டத்தில்தான் - வரலாறு காணாத எறிகணைத் தாக்குதல் வன்னிப் பெருநில மக்களின் மீது மேற்கொள்ளப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.. பல்லாயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டனர். ஊனமாக்கப்பட்ட, படுகாயப்படுத்தப்பட்ட எண்ணற்ற அப்பாவி மக்களுக்கு மருத்துவம் செய்யத்துணிந்த மருத்துவமனைகளும் இலங்கை இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.
முதன்முறையாக, போர்ப்பகுதியில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேற இலங்கை இராணுவத்தால் இதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வவுனியா, புல்மோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களை நோக்கி இதுவரை புலிகளின் பிரதேசத்தை நோக்கி இராணுவத்தால் விரட்டப்பட்டிருந்த அப்பாவி மக்கள் செல்லத் தொடங்கினர்.
வவுனியாவில் இயங்கும் பன்னாட்டு மருத்துவ இயக்கமான " எல்லைகளுக்கு அப்பாலான மருத்துவர்" இயக்கத்தின் இந்த கலகட்டத்திற்கான மருத்த்துவ அறிக்கைகளை படித்தால் இந்த மக்கள் எப்பேர்ப்பட்ட துன்பத்திற்கு இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்:
மே 7ஆம் திகதியன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவிற்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும், சகோதரரும், இனவாதக் கருத்துக்களை அள்ளிவீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்சே தலைவராக நியமிக்கப்படடார்..
மீதமுள்ள 18 பேர்களில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டுவீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளியவரும், இலங்கை இராணுவத்தின் செயலாளருமாகிய கோத்தபாயா ராஜபக்சேவும் ஒருவராவார்.
உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவார்களாகவும் ( இதில் இலங்கை இராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம் ), 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார்
1. Senior Presidential Advisor Basil Rajapaksa - Chairman of the Taskforce
2. S.B.Divarathne - the Secretary
3. Secretary to the President, Lalith Weeratunge,
4. Secretary, Defence, Public Security Law and Order, Gotabaya Rajapaksa,
5. Secretary, Ministry of Finance and Planning, Sumith Abeysinghe,
6. Secretary, Ministry of Resettlement and Disaster Relief Services, U L M Haldeen,
7. Secretary, Ministry of Nation Building and Estate Infrastructure Development, W.K..K.Kumarasiri,
8. Secretary, Ministry of Highways and Road Development, S.Amarasekera,
9. Secretary, Ministry of Power and Energy, M M C Ferdinando,
10. Secretary Ministry of Land and Land Development, J R W Dissanayake,
11. Secretary, Ministry of Health Care and Nutrition, Dr. Athula Kahandaliyanage,
12. Chief of Defence Staff, Air Chief Marshal G D Perera,
13. Commander of the Army Lt.Gen.Sarath Fonseka,
14. Commander of the Navy, Vice Admiral Wasantha Karannagoda,
15. Commander of the Air Force, Air Marshall, W D R M J Gunatillake,
16. Inspector General of Police, Jayantha Wickremarathne,
17. Director General\Department of Civil Defence, Rear Admiral S P Weerasekera,
18. Chief of Staff of the Sri Lanka Army\Competent Authority for the Northern Province Maj.Gen..G A Chandrasiri, and
19. Former Director General\National Planning Dept. B.Abeygunewardena .
வன்னிப் பெருநிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்திற்கு இவர்கள் இட்ட பெயர் 'வடக்கின் வசந்தம்'. தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
இலங்கை தலைமை நீதிபதி சில்வாவின் நேர்மை:
ஜூன் 5 ஆம் திகதியன்று இலங்கையின் தலைமை நீதிபதியான திரு. சரத் நந்தா சில்வா அவர்கள் அகதிகள் முகாமில் உள்ள மக்களின் உரிமைகளைப் பற்றி பேசியது உண்மை நிலையை உணர்த்துவதாக இருந்தது: "நம் நாட்டில் உள்ள சட்டப் பாதுகாப்புகளுக்கு அப்பாற்பட்டே அந்த மக்கள் உள்ளார்கள்.
அவர்கள் மீது இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்து அவர்களால் இலங்கை நீதிமன்றங்களில் நீதி கேட்க முடியாது. இதன்மூலம் அந்த மக்களுக்கு நாம் மிகப் பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். இவ்வாறு கூறுவதற்கான விளைவுகளையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்" என்று அவர் கூறினார்.
ஏதுமற்ற மக்களும், இந்திய அரசின் வஞ்சகமும் :
இலங்கையின் தலைமை நீதிபதியின் இந்தக் கூற்றுக்குப் பிறகும் கூட இந்திய அரசு இலங்கை அரசுடன் தான் இதுவரை கொண்டிருந்த உறவை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. மாறாக, உறவுகளையும், உடலின் பாகங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் மக்களிடம் கடைசியாக மிஞ்சி நிற்கும் மானத்தையும் பறிக்க முயலும் ராஜபக்சேவின் கொடுங்கோல் திட்டத்தை ஆதரிக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்லவுமே அது முனைந்து நிற்கிறது.
ஏப்ரல் 27 ஆம் தேதியன்று அகதிகளின் மறுவாழ்விற்காக 100 கோடி ரூபாயை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளிக்க முன்வந்த பின்னரே பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தின் எறிகணைகளுக்குப் பலியாகினர். இதற்கு இந்திய அரசு எந்தவிதக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. மே 7ஆம் திகதியன்று "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வட ஈழத்தின் மீளுருவாக்கத்திற்காக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட- தமிழர் தரப்பில் பிரதிநிதிகளைக் கொண்டிராத - 'கொடுங்கோல்' குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை.
மாறாக, மே 27 ஆம் திகதியன்று, இந்திய அரசு அதிரடி அறிவிப்பொன்றினை வெளியிட்டது. அதாவது, அகதிகள் மீள்வாழ்வுத் திட்டங்களுக்காக, இலங்கை அரசுக்கு வழங்குவதாகச் சொன்ன 100 கோடி ரூபாவை 500 கோடியாக அதிகரித்திருப்பதாக அறிவித்து இலங்கை அரசினைக் களிகொள்ளவைத்தது.
மே 22ஆம் திகதி அறிவிப்புக்கும் 27ஆம் திகதி அறிவிப்புக்கும் இடையில் பெருகிய கோடிகளை, வன்னிப் பெருநிலத்தை மீளுருவாக்கம் செய்யப்போகும் கொடுங்கோல் குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் அளித்திருக்கும் அங்கீகாரமாகவே கருத முடியும்.
வடக்கின் வசந்தத்திற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் முன்வைத்துள்ள 'போல் போட்' வேளாண் திட்டம்
'அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாத துவக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க, 'அதற்குத்தான் நான் இருக்கிறேனே' என்று நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பிணந்தின்னிக் கழுகாக, இலங்கை அதிபரின் இரட்சகனாக முன்வந்திருக்கிறார்.
ஜூன் 9 ஆம் தேதியன்று இலங்கை அதிபர் ராஜபக்சாவை இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சந்தித்தார். அவர்கள் 'வடக்கின் வசந்தம்' திட்டம் குறித்து கலந்துரையாடினர். அந்தக் கலந்துரையாடலின்போது வடக்கு மாகாணத்தின் வேளாண் துறையைச் சீரமைப்பது குறித்து விவாதித்தனர். அப்போது, "இலங்கையின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை வலுவாக்க இந்தியாவின் உதவி இன்றைய காலத்திற்கு இன்றியமையாதது. இந்த உதவியை இலங்கை உடனடியாக எதிர்பார்க்கிறது.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களால் இவ்வளவு துரிதமாக செயல்படமுடியுமா என்பது சந்தேகமே," என்று இலங்கை அதிபர், சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். "இதுகுறித்து இந்தியாவும் இலங்கையும் ஜூலை மாதமே கலந்துரையாட வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார். "வடக்கின் வசந்தத் திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படவுள்ள வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்" என்பதே ராஜபக்சே, சுவாமிநாதனிடம் கூறிய கூற்றின் சாரம்.
ராஜபக்சேவின் கூற்றை எம்.எஸ்.சுவாமிநாதன் அப்படியே ஏற்றுக்கொண்டார். "தமிழ் மக்களின் பிரச்சினை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்படவேண்டும். என்றாலும் கூட இன்றைய உடனடித் தேவை அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதுதான்" என்று அவர் கூறியிருக்கிறார். அதோடு அவர் நிற்கவில்லை. வேளாண் மீட்டுருவாக்கத்திற்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் அவர் முன்வைத்திருக்கிறார்
.
நான்காம் ஈழப்போரில் வீரமரணம் அடைந்த மறவர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்





வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை.இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.இந்த வைபவம் குறித்து பாதுகாப்புத் துறையில் விசாரித்தபோது, ""போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு அறி வித்ததை அடுத்து, முகாம்களில் (திறந்த வெளி சிறைக் கூடங்கள்) தஞ்சமடைந் துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அரசு மேற் கொள்ள வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின. இதனை ஏற்று அதனை மேற்கொள்ள வன்னிப் பகுதி ராணுவத் தினருக்கு உத்திரவிடப்படும்னு நினைத் தோம். ஆனால் இதற்கு மாறாக, இறுதி நாளில் நடந்த "நிகழ்வுகளின்' சாட்சியங் களை முற்று முழுதாக அழித்துவிட வேண்டுமென கொழும்பு தலைமையகத்தி லிருந்து கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இந்த பணிகளை ராணுவத்தினர் செய்து முடிக்கும் வரையில் முப்படைகளுடனான வைபவத்தை நிறுத்தி வைத்திருந்த அரசு, தற்போது அந்தப் "பணிகள்' முடிந்துள்ள நிலையில் கொண்டாடியுள்ளது'' என்று, கடந்த 10 நாட்களாக வன்னிப் பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட "பணிகளை' விவரித்தார் வைபவத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவரே.இந்த நிலையில், வன்னிப் பகுதியில் அரசு அமைத்துள்ள "முகாம்'களுக்கு (திறந்தவெளி சிறைக்கூடங்கள்) விசிட் அடித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா, இலங்கை அரசின் கொடூரங்களைப் பகிரங்கப்படுத்தி யிருப்பது, மனசாட்சி உள்ளவர்களை உலுக்கியுள்ளது.நீர்க்கொழும்பு மாவட்டத்தில் மாரவில் பகுதியில் அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சரத் என் சில்வா, ""வன்னிப் பகுதியில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள "நிவாரண முகாம்'களுக்குச் சென்று வந்தேன்.அங்கு தமிழர்கள் படும் துன்பங்களையும் வேதனை களையும் வார்த்தைகளில் என்னால் விவரிக்க இயலவில்லை. செட்டிக்குளம் முகாமிற்குச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. ஒருவேளை கஞ்சிக்காக அவர்கள் ஏக்கத்துடன் இருந்தனர். இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட, 50 பேர், 60 பேர் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. முள்கம்பிகளால் சூழப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த மக்கள், ஒரு பிரட் துண்டுக்காக பல நாட்கள் காத்துக் கிடப்பது கொடுமை.மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையெல்லாம் நாம் கட்டியெழுப்புகிறோம். ஆனால், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள், மிகச் சிறிய கூடாரங்களுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர். ஒரே கூடாரத்தில், 10 பேர் திணிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்தக் கூடாரத்தில் இந்த 10 பேரும் நிற்கத்தான் முடியும். உட்காரக் கூட முடியாது. கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால், அவ்வளவு எளிதாக வெளியேறி விட முடியாது. அவர்கள் கழுத்து உடைந்துவிடும்.மொத்தத்தில், வார்த்தைகளால் விவரித்து விட முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் அவர்கள். அவர்களுக்குப் போதுமான அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். உரிய நிவாரணங்களை அளிக்காவிட்டால் நாம் குற்றம் செய்தவர்களாகி விடுவோம். அந்தப் பழியை நாம்தான் ஏற்க வேண்டும்.நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத் தின் முன் கொண்டு வரப்படவே இல்லை. "இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் இருக் கிறது' என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல் லாம் பச்சைப் பொய்கள். இதனையெல்லாம் நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம். கவ லையில்லை'' என்று வன்னி முகாம்களின் நிலைமைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார் தலைமை நீதிபதி.விழா முடிந்து வெளியேறும்போது சக நீதிபதிகளிடம் மனம் திறந்த தலைமை நீதிபதி, ""முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து, அவர்களை ஒன்றிணைய விடாமல் தடுப்பதும் பற்றி அந்த மக்கள் விவரிக்கும் போது, என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது'' என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.வன்னி "முகாம்' அவலங்களை தலை மை நீதிபதியே பகிரங்கப்படுத்தியிருப்பது இலங்கை அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவே கொழும்பு பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில், ""பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை அரசு அவிழ்த்துவிடும் பொய்களை சிங்களவர் கள் நம்பலாம். தமிழர்களாகிய நாங்கள் நம்பவில்லை. கடைசி நாள் போரின் போது அங்கு என்ன நடந்தது என்பது அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தனி முகாம் களில் அடைந்து கிடக்கும் அவர்கள் யாருடனும் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். தனி முகாம்க ளில் உள்ள அவர்களோடு கருணாவின் ஆட்கள் ஊடுருவியிருப்பதால், பிரபா கரனைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் மௌனத் தையே கடைப்பிடித்து வருகின்றனர்'' என்று வன்னிப் பகுதியிலிருந்து கிடைக் கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, பிரபாகரன் பற்றிய பொய்யான தகவல்களை பரப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள இலங்கை அரசு, புலிகளின் புலனாய்வுப் பிரிவு (உளவுத்துறை) தலைவர் பொட்டு அம்மான் குறித்த தேடுதல் வேட்டை யைத் துவங்கியுள்ளது.பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பொய்யான செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்த சமயத்தில் "புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தளபதி சூசை உள்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர்' என்று கொக்கரித்தது ராணுவம். இதையே, பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தினார் ராணுவ பேச்சாளர் உதயநாணயக்கார.இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. "யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல்' என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே ""கூடாது'' என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.இந்த நிலையில், (20-க்கும் மேற்பட்ட ஊடறுப்பு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய சம்பவங்களை "பிரபாகரன் உயிருடன் உள்ளார்' என்ற தலைப்பில் வெளியான நக்கீரன் இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்).தீவிர தேடுதல் வேட்டையில் இலங்கை ராணுவம் மட்டுமல்ல இலங்கை உளவுத்துறையும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "ரா'வும் ஈடுபட்டது. இந்த உளவு அமைப்பினர் "பொட்டு அம்மான் தப்பித்து விட்டார், அவர் கொல்லப்படவில்லை' என்று அறிந்து அதனை ராஜபக்சே விடம் தெரிவித்தனர். இதனை அடுத்துதான், பத்திரிகையாளர்களை சமீபத்தில் மீண்டும் சந்தித்த உதயநாணயக்கார, ""பொட்டு அம்மான் கொல்லப் பட்டதாக சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை அல்ல. அவரை தேடி வருகிறோம்'' என்று ஒப்புக் கொண்டார். இலங்கை பாதுகாப்புத் துறையும் இதனை வெளிப்படுத்தி யது. ஆனால், பொட்டு குறித்த எந்தத் தகவல்களும் அதற்கு மேல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.இந்தச் சூழலில் பொட்டு அம்மான் குறித்து நாம் விசாரித்தோம். கடந்த 10 நாட்களாக அமைதியாக இருந்த பொட்டு, செவ்வாய்க்கிழமை தனது உளவுத்துறையின் கீழ் சர்வதேச அளவில் செயல்படுபவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ""நலமாக இருக்கிறோம், பிறகு பேசுவோம்'' என்று கதைத்துள்ளார். பொட்டுவின் குரலை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட புலிகளின் உளவுப்பிரிவினர் தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டபோது, ""நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? நிம்மதியாக இருங்கள்'' என்று தெளிவுபடுத்தியுள்ளார் பொட்டு அம்மான் என்பதாக நமக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன.இப்படிப்பட்ட சூழ்நிலையில், புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தொடர்ந்து தான் அளித்துவரும் பேட்டிகளில் "பிரபாகரன் இல்லை' என்பது போலவே பதிவு செய்து கொண்டு வருகிறார். இது உலகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.இதுபற்றி புலிகளின் சர்வதேச தொடர்புகளில் நாம் விசாரித்தபோது, ""சர்வதேச நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகளின் செயல்பாடு களுக்கு இது மிகப் பெரிய தடை. அதனால் தான் அந்தத் தடை நீக்கப்பட தற்போது உலகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பிரபாகரன் இல்லை என்று அவர்கள் நம்பினால்தான் இந்தத் தடையை நீக்க உலக நாடுகள் முன்வரும். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, சுமுகமான சூழல் உலகம் முழுவதும் பரவுகிற நேரத்தில் திடீரென பிரபாகரன் தோன்றுவார் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

Sunday, June 28, 2009


புளியைக் கரைக்கும் 'பொட்டு'!--ஏமாற்றப்பட்டதா இலங்கை ராணுவம்?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக்கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.அதனால் 'கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்' என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,''பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், 'பொட்டு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 'பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்' என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை...'' என்கிறார்கள்.புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ''ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், 'எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!' என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான 'ரா', இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, 'ரா'வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. கருணா, சிங்கள அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, 'ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்' என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் கேட்டு இந்திய அரசு, சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் ராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், 'பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது' என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!'' என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே 'புலிகளின் பெரிய மூளை' என்று குறிப்பிடப்பட்டவர்.பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!

டில்லியில் இலங்கை-இந்திய பிரதிநிதிகள் குழு சந்திப்பு: பேசப்பட்டது என்ன? விளக்குகிறார் த.தே.வி.இ. பொதுச் செயலர் தியாகு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2009, 02:37.14 PM GMT +05:30 ]
இந்தியாவிற்கு வந்த சிறிலங்க அரசு குழுவுடன் இந்திய தரப்பு நடத்திய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்த் தேசிய ‌விடுதலை இய‌க்க‌த்‌தி‌ன் பொது‌‌ச் செயல‌ரு‌ம், சமூக நீதி தமிழ் தேசத்தின் சிறப்பு ஆசிரியருமான தோழர் தியாகு அவர்கள் இந்திய இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல், கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ளது.
கேள்வி: இலங்கையில் இருந்து அதிபர் ராஜபக்சவினுடைய சகோதரரும், அவருடைய பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, அதிபருடைய செயலர் லலித் வீரதுங்க ஆகிய மூவரும் டில்லிக்கு வந்துள்ளனர். அவர்கள் புதன்கிழமையன்று அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிறகு நமது அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுக்களில் என்ன பேசப்பட்டது என்பதோ அல்லது என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று காலை வரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால், ஒரு பத்திரிகையில் அவர்கள் பேசியது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, இன்றுள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. எனவே மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், தாங்கள் வாழ்ந்துவந்த இடங்களில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? தோழ‌ர் தியாகு: முதலில் யார் யார் பேசினார்கள் என்பதை நாம் நினைவில் வைத்து பார்க்க வேண்டும். அந்தப் பக்கத்தில் இருந்து டில்லிக்கு வந்து பேசியிருப்பவர்கள் அவர்களுடைய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, அவர்களுடைய அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ச. இன்னொருவர், சிறிலங்க அதிபரின் செயலராக இருக்கக் கூடிய லலித் வீரதுங்கா. இந்த மூன்று பெயர்களையும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வந்து போகிற போது கடைசியாக கிருஷ்ணாவை பார்த்து விடை பெற்றுக் கொண்டார்கள் என்பதைத் தவிர, படத்திற்காக அவருடன் கையைக் குலுக்கினார்கள் என்பதைத் தவிர, முழுக்க முழுக்க பேச்சுவார்த்தையை நடத்தியவர்கள் யார் என்றால், இந்திய அரசினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய அரசினுடைய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன். இந்திய அரசினுடைய பாதுகாப்புச் செயலர் விஜய் சிங். அங்கே மூன்று பேர், இங்கே மூன்று பேர். இந்த ஆறு பெயர்களையும் மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த ஆறு பேரில் யாரும் அமைச்சர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலைமை இல்லை இங்கே, இவர்களெல்லாம் அதிகார வர்க்கம் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அரசியல் தீர்வு பற்றி, இராணுவத்தை பாசறைக்கு திருப்பி அனுப்புவது பற்றி, அகதிகள் மறுவாழ்வு பற்றியெல்லாம் பேசியதாக மத்திய அரசின் வட்டாரங்கள் வழியாக செய்தி விடப்படுகிறது. அதாவது அயலுறவு வட்டாரங்கள். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. இவர்கள் பெயர்களை ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்றால், இந்த சுத்தமான யோக்கியர்கள் பெயர் இதற்கு முன்பு எப்படி வந்ததென்று நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். இதே கோத்தபாய ராஜபக்ச, போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தியை தெளிவாகச் சொன்னார். இதேபோல வட்டாரங்கள் அப்பொழுதும் ஒரு செய்தியைச் சொன்னார்கள். சிவ்சங்கர் மேனனும், எம்.கே. நாராயணனும் பறந்து போனார்கள் கொழும்புவிற்கு, போரை நிறுத்துமாறு சொல்வதற்கு. அவர்களது கருத்து எங்களுக்கும் இணக்கமானதுதான் என்று அந்த வட்டாரங்கள், அதாவது இலங்கை அரசு. இதெல்லாம் அப்போது வந்த செய்திகள். பத்திரிகைகள் பரப்பிய செய்திகள். இந்த இடத்தில் கூட தலைப்பு வந்தது, போரை நிறுத்த இந்தியா கோரிக்கை, அவசரமாகச் செல்கிறார்கள். அவர்களும் சம்மதிக்கிறார்கள் என்பது போன்றெல்லாம் தோற்றம் காட்டினார்கள். அப்போதும் கோத்தபாய ராஜபக்ச சொன்னார், அவர்கள் போரை நிறுத்த சொல்வதற்காக வரவும் இல்லை, நாங்களும் போரை நிறுத்துவதாக இல்லை. ஏனென்றால், நாங்கள் அன்றாட நிலவரங்களை, on a day to day basis இங்கே நடக்கிற ஒவ்வொன்றையும் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்களைக் கலந்து பேசிதான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. எனவேதான், அவர் என்ன சொன்னார் என்றால், ஏதோ இந்தியா தங்களை போரை நிறுத்தச் சொல்வது போலவும், இந்தியாவைக் கொண்டு போரை நிறுத்திவிடலாம் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சொன்னார், நமக்கு நினைவிருக்கும். எனவே, வெளியில் வருகிற செய்திகளை வைத்து எல்லாம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியாது. உண்மையிலேயே இவர்கள் பேச்சு நடத்தியதற்குப் பிறகு, அங்கு களத்தில் எடுக்கப்படுகிறத நடவடிக்கைகளை வைத்துதான் நாம் இங்கு என்ன பேசினார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இவர்கள் போய் பேசிவிட்டு வந்ததற்குப் பிறகுதான் அங்கு போர் தீவிரமடைந்தது. போரில் புதிய கருவிகள் கையாளப்பட்டன. புதிய அழிவுகள் ஏற்பட்டன. போரெல்லாம் முடிந்ததற்குப் பிறகு இதே கோத்தபாய ஒரு பேட்டி கொடுத்தார். "இந்தியாவிற்கும் எங்களுக்கும் எந்த பிணக்கும் இல்லை". பார்க்கப் போனால், அங்கு மூன்று பேர், இங்கு மூன்று பேர். மொத்தம் ஆறு பேர் அடங்கிய குழுதான் ஒவ்வொன்றையும் வழி நடத்தியது. அந்த மூன்று பேர்தான் இந்த சுத்த யோக்கியர்கள்தான் இப்பொழுது வந்திருக்கிற மூன்று பேர். அதே மூன்று பேர்தான் இப்பொழுது பேச வந்திருக்கிறவர்கள். அவர்களும் அவர்களும் பேசினால் என்ன பேசுவார்கள் என்பதை எளிதாக யூகிக்க முடியும்.
அவர்களாக வாயைத் திறந்து நாங்கள் இன்னது பேசினோம் என்று இப்பொழுது சொல்ல மாட்டார்கள். எனவே இது எல்லாமே பொய். ஆனால், என்ன பின்னணியில் இந்த பேச்சு நடத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பாசறைக்கு இராணுவத்தை திரும்பிப் போகுமாறு இந்தியா வலியுறுத்தியது என்று அந்த செய்தி கூறுகிறது. எங்கிருக்கிறது பாசறை. போர்க் களத்தில் இருந்து திரும்பிப் போகுமாறு கேட்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றம், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது இந்தியா இதனை கேட்கவில்லை. அக்டோபர் 14ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் போட்டார்கள். எந்தக் கட்டத்திலும் அதையெல்லாம் கேட்காமல், போரெல்லாம் முடிந்த பிறகு, ஒரு இலட்சம் மக்கள் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, போரின் இறுதி நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்று சுயேட்சையான ஆதாரங்கள் அடிப்படையில் ரைம்ஸ் நாளிதழ் லண்டனில் இருந்து செய்தி வெளியிட்டிருக்கிறது. பெரிய இழப்பு, அழிவு ஏற்பட்டிருக்கிறது என்ற சொல்லை ஐ.நா. பயன்படுத்தியிருக்கிறது. இவ்வளவும் வந்ததற்குப் பிறகு, இப்ப பாசறைக்குத் திரும்பிப் போகச் சொல்வதென்றால் என்ன காரணம்? இது சும்மா பேச்சுக்காக செய்வது. அங்கே என்ன பாசறை இருக்கிறது. எங்கே திரும்பிப் போவது? உண்மை என்னவெனில் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பெரிய இராணுவ பாசறைகளை இந்திய உதவியுடன் அமைக்கும் வேலை அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே மக்கள் இல்லாத அந்த இடத்தில் பாசறைகளை அமைத்ததற்குப் பிறகுதான் இவர்களை இந்த முகாம்களை விட்டு அங்கு செல்வதற்கு அனுமதிக்கப் போகிறார்கள். இந்த பாசறைகள் ஏன் தேவைப்படுகிறது என்றால், காஸா பகுதியிலும், மேற்குக் கரையிலும் இஸ்ரேல் யூதக் குடியேற்றங்களை பாதுகாப்பதற்காக எப்படி தன்னுடைய இராணுவத்தைப் பயன்படுத்துகிறதோ, அதேபோல் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி, அந்த சிங்கள குடியேற்றங்களை பாதுகாப்பதற்காகவும், தமிழர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும்தான் சிங்கள அரசு இராணுவ பாசறைகளை, பெரிய இராணுவ முகாம்களை, பலாலி போன்ற இராணுவ முகாம்களை எல்லா தமிழர் பகுதிகளிலும் அமைக்கப் போகிறார்கள். இதை தடுத்தோ, எதிர்த்தோ இந்தியா இதுவரை ஏதும் செய்யவில்லை, செய்யப் போவதும் இல்லை. இதில் யாருக்கும் எந்தவிதமான ஐயப்பாடும் தேவையில்லை. கேள்வி: தற்போது முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை அவர்களின் வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூட வலியுறுத்தியதாக அச்செய்தி கூறுகிறது? தியாகு: அகதிகளை விரைவில் திருப்பி அனுப்புவது என்று சொல்கிறார்கள். முதலில் ஏன் இந்த முகாம்களை அவர்களது பிறந்த ஊர், வாழ்ந்த ஊருக்கு வெளியே கொண்டு சென்று அமைக்க வேண்டிய தேவை என்ன என்ற எழுகிறது. கண்ணி வெடி, கண்ணி வெடி அகற்றுதல் இதெல்லாம் சாக்கு. இந்த கண்ணி வெடிகளுக்கு மேல நடந்து போய்தானே அங்கு வாழ்ந்த மக்களை விரட்டி அடித்தீர்கள். அதற்கு மேல் ஏறிப்போய்தானே போர் நடத்தினீர்கள். அப்புறம் எங்கிருக்கிறது கண்ணி வெடி? கண்ணி வெடிகள் இருந்ததென்றால், அந்தப் பகுதிகளில் மக்கள் முகாம் அமைக்க வேண்டாம். வேறு பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாமே. ஏன் அவர்களை முகாம்களில் அடைத்து வைக்க வேண்டும். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? எந்த நாட்டு சட்டத்தின் படி இதெல்லாம் நடக்கிறது? கேள்வி: 13வது திருத்தத்தை பலப்படுத்தி நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்ததாகக் கூட அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. தியாகு: அரசியல் தீர்வு பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை. அதேபோல, 13வது திருத்தத்தை பலப்படுத்தி அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் அப்படியென்று இவர்கள் வலியுறுத்தியதாகக் கூட சொல்கின்றனர். ஈழத் தமிழர் இனச் சிக்கலை நன்கு புரிந்து கொண்டவர்கள், இது தொடர்பான அரசியல் தீர்வு முயற்சிகளை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று நன்றாகத் தெரியும். அது என்னவென்றால், 13வது திருத்தம் மூலமாக தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படப் போவதில்லை. தமிழர்களுக்கான ஆட்சி உருவாக்குவதற்கான வழிவகை இல்லை. பெயரளவிற்கு சிங்கள ஆட்சி மொழி, தமிழையும் துணை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்வது, தமிழையும், ஆங்கிலத்தையும் வைத்துக் கொள்வது, இதுபோன்ற மீண்டும் ஏற்றத் தாழ்வான விதிமுறைகளைத்தான் கொண்டு வரப்போகிறார்கள். எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாவட்ட பஞ்சாயத்தைப் போன்ற ஒரு மாகாண பஞ்சாயத்தை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டமெல்லாம். அதுதான் 13வது திருத்தமென்பது. குறைந்தது இந்திய அதிகாரிகள் பேசும்போது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தினார்களா? அப்படி வலியுறுத்தியிருப்பார்களென்றால் அது வடக்கு- கிழக்குப் பகுதிகளை இணைக்க கோருகிறது. கேள்வி: இல்லை, அப்படி எதுவும் கோரப்படவில்லை. தியாகு: அதுதான் முக்கியமானது. ஏனென்றால் 13வது திருத்தம் அவர்கள் கொண்டு வந்தது. ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்தது. ஆனால், ஒப்பந்தத்திற்கும், 13வது திருத்தத்திற்கு வேறுபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை, வேறு யாரையும் வேண்டாம், இந்திய அரசிற்கு முழுக்க ஆதரவாக இருக்கிற சந்திரஹாசனை கேட்டாலே சொல்வார். எங்களுக்கு வேண்டியது 13வது திருத்தம் இல்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம்தான் என்று அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நுட்பமான வேறுபாடுகள், எம்.கே. நாராயணனுக்கோ, சிவசங்கர் மேனனுக்கோ, விஜய் சிங்கிற்கோ தெரியாது என்று மட்டும் நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அவர்களுக்கு இதெல்லாம் முக்கியமே இல்லை. இதெல்லாம் அவர்கள் மறைத்து வைத்திருக்கிற கொலைக் கருவிக்கு மேல் இருக்கிற பூச்சுகள். அதை மறைப்பதற்காகத்தான் இதையெல்லாம் பேசிகிறார்கள்.
இவர்களிடம் அவர்கள் வந்து பேச வந்ததனுடைய உண்மையான நோக்கத்தை இப்பொழுது சொல்கிறேன். இப்பொழுது 4வது ஈழப்போர் ஒரு கசப்பான முடிவிற்கு வந்துவிட்டது என்று புலிகள் அறிவித்துவிட்டார்கள். அது தமிழர்களுக்கு ஒரு தோல்வியில், நெருக்கடியில் முடிந்திருக்கிறது. ஏராளமான தமிழர்களை இழந்திருக்கிறார்கள், போராளிகள் மடிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் எல்லாம் இதுகுறித்து கவலையடைந்திருக்கிறார்கள். நெருக்கடி அடைந்திருக்கிறார்கள். அந்த விடுதலைப் படையினுடைய தலைவர் என்ன ஆனாரோ என்ற கேள்விக்குறியுடன் நின்று கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைப் பார்க்கிற போது, ஓர் விடுதலைப் போர் என்பது விடுதலை இலக்கை அடைவது வரை முடிவதில்லை. களங்கள் மாறிவரும், போர் முறைகள் மாறிவரும். ஆனால், போர் தொடர்ந்து நீடிக்கும். விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கிடையாது. நம்மை பற்றியோ, வியட்நாமை பற்றியோ நாம் பேச வேண்டிய தேவையில்லை. இதே ஈழம் தொடர்பாக, இந்த போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே, சென்ற ஆண்டு அநேகமாக நவம்பர், டிசம்பரில், கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன்னதாக சரத் பொன்சேகா கூறியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இந்த நிலப்பகுதி முழுவதையும் கைப்பற்றுவது என்பது ஒன்றும் முடியாத காரியமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நிலங்களையும் எங்களால் கைப்பற்ற முடியும். ஆனால், கைப்பற்றுவதன் மூலமாகவே பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆயிரம் புலிகள் மிச்சமிருந்தால் கூட அவர்கள் கெரில்லா முறைக்கு மாறிவிடுவார்கள். இந்த கெரில்லா தாக்குதல் நடத்தும்போது, மரபு வழி போரில் வெற்றி பெற்றதைப் போல நாங்கள் வெற்றி பெற முடியாது. அதை சமாளிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். உண்மையிலேயே நான் அதைப் பற்றிதான் கவலைப்படுகிறேன் என்று பொன்சேகா சொன்னார். இரண்டாவது, கொழும்புவில் அமெரிக்கத் தூதராக இருந்து ஒய்வு பெற்றுச் சென்றவர் சென்னைக்கு வந்து ஒரு கூட்டத்தில் பேசினார். இந்த நிலங்களையெல்லாம் பிடித்து, புலிகளை போரில் தோற்கடிப்பதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது. அது தேவையற்றது. அப்படி செய்ய முடியாது. புலிகளை அப்படி அடியோடு தோற்கடிப்பது சாத்தியமான ஒன்று அல்ல. ஏனென்றால், எல்லா நிலங்களையும், ஒரு சதுர அங்குலம் கூட மிச்சமில்லாமல் பிடித்ததற்குப் பிறகும் அவர்கள் கெரில்லாப் போர் முறைக்கு மாறிவிடுவார்கள். மாறியதற்குப் பிறகு நீங்கள் அவர்களை ஒடுக்கிவிட முடியாது. இது நீண்ட காலம் நடக்கும். (ஏற்கனவே இந்தியாவிற்கு கிடைத்த அனுபவமெல்லாம் நமக்கு தெரியும்). வெறும் 2,000 பொடியன்கள் என்று அழைத்த ராஜீவ் காந்தியினால், ஒரு லட்சம் படையினரை இறக்கியும் கூட அவர்களை ஒடுக்கவோ, அழிக்கவோ முடியவில்லை, இந்திய படைதான் புறமுதுகு காட்டி திரும்பி ஓடி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இது பொன்சேகாவுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். மரபு வழி போர் என்பது எப்போதுமே அரசிற்கு பன்மடங்கு சாதகமானது. எப்போதுமே விடுதலைப் படைக்கு பாதகமானது. இதையெல்லாம் மீறி மரபு வழிப்போரில் புலிப்படை சாதனைகளைப் படைத்தது. கிளிநொச்சியை கைப்பற்றியது, ஜெயசிக்குருவை முறியடித்தது. ஆணையிறவைப் பிடித்தது. பூநகரியில் கிடைத்த வெற்றி இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால், அதற்கெல்லாம் ஒரு எல்லை இருக்கிறது என்பது தற்போது தெரிந்துவிட்டது. அதுவும் இந்த உலகமயமாக்கல் ஒடுக்குமுறை என்ன செய்துவிட்டது என்று சொன்னால், பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பல நாடுகளையும், பல நாடுகளினுடைய வளங்கள், சக்திகள், படை, அறிவு எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து கொண்டு நசுக்குகிற போது, மக்கள் படையினால் அதை எதிர்த்து மரபு வழிப்போரில் நிற்க முடியவில்லை. ஆனால், கரந்தடிப் போர் அப்படி அல்ல. கரந்தடிப் போர் விடுதலை இயக்கங்களின் தாயகம். அங்கு அயலவன் வந்து ஒன்றும் செய்ய முடியாது. 'நெடும்புனலு‌ள் வெல்லும் முதலை அடு‌ம்புன‌லி‌ன் ‌நீ‌ங்‌கி‌ன் அதனை‌ப் ‌பிற' என்று வள்ளுவர் சொல்கிறார். ஆழ்ந்த நீர் தடாகத்திற்குள், நீர் பகுதிக்குள் முதலை வெற்றி பெறும், எதை எதிர்த்தும் வெற்றி பெறும். அது கரைக்கு வந்துவிட்டால் எதனிடமும் தோற்றுப் போகும். அதுபோலத்தான், விடுதலை இயக்கங்களுக்கு கரந்தடிப் போர் முறை என்பது. அவர்களுடைய தாய்த் தடாகம் அது. அது அவர்களுடைய நீர்நிலை. அதை வியட்நாமில் அமெரிக்கா அனுபவித்தது. இதே ஈழத்தில் இந்தியப் படை அனுபவித்தது. இப்பொழுது அந்தப் போர் மீண்டும் தொடங்கிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது. இப்பொழுது அவர்கள் இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இந்தப் போரில் மிச்சம் இருப்பவர்கள் மீண்டும் தங்களை அணி சேர்த்துக் கொண்டும், இந்தப் பகுதிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியவர்கள், அது வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு முன்கூட்டியே போய் வேறு இடங்களில் தங்கிக் கொண்டவர்கள், அது அம்பாறையில், மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில், வன்னிக் காட்டினுடைய பிற பகுதிகளில் போயிருக்கிறவர்கள், அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அமைப்பாக ஒன்று திரண்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்களுடைய போராட்டங்கள், தமிழகத் தமிழர்களுடைய போராட்டங்கள், அவர்கள் நடத்துகின்ற விடுதலைக்கான போராட்டங்கள், இவற்றிற்கிடையே ஒரு இசைவு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படியொரு முறையான ஒழுங்கமைப்பு வந்து, திட்டமிட்டு மீண்டும் ஒரு கறந்தடிப் போரைத் துவங்குவதற்காக காத்திருக்கிறார்கள்.
அப்படி காத்திருப்பது இந்த அரசிற்கு மிக நன்றாகத் தெரியும். சிங்கள அரசிற்கும் தெரியும், இந்திய அரசிற்கும் தெரியும். இதை முறியடிப்பதற்கு இவர்கள் தொலைநோக்குடன் திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அண்மைக் காலத்தில் அங்கு சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. காட்டிலிருப்பவர்களையெல்லாம் தேடி அழிக்கிற முயற்சியில், Fleshing out, wiping out என்று சொல்லி இராணுவத்தைக் கொண்டு போய் இறக்கியிருக்கிறார்கள். அப்படி போன இராணுவத்தினர் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 4 நாட்களுக்கு முன்பு மணலாற்றிற்கு அருகில் நெடுங்கேணியில் இப்படி தேடிச் சென்ற இராணுவத்தினரை புலிகள் தாக்கியதில் 150 படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்திகளையெல்லாம் வெளியில் விடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பதறியடித்துக் கொண்டு இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எனவே, எப்படி காட்டுப் பகுதியில் இந்தப் போரை தொடர்ந்து கொண்டு செல்வது. கரந்தடிப் போரை எப்படி சமாளிப்பது. இதுபற்றிப் பேசுவதற்காகத்தான் இவர்கள் டில்லிக்கு வந்தது. இதற்கான கருவிகள், இதற்கான ஆயுதங்கள், இதற்கான ஆலோசனைகள், இதற்கான படை உதவி, இதற்கான கருவிகள் பெறுவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதே பசில் ராஜபக்ச, பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை போனார். போருக்கு முன்னாடி ஒரு முறை போனார், போர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு முறை போனார். ஏன் போனார்? பாகிஸ்தான் அரசு ஒன்றும் சுயாட்சி பற்றி, 13வது திருத்தம் பற்றி அல்லது ஒப்பந்தம் பற்றி ஏதாவது பேசப் போகிறதா? அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அவர் எதற்குப் போனால் என்றால், ஒரு 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிற விமானத்தில் இருந்து கொண்டு கணினியின் துணையோடு, ஒரு மனிதன் நிலத்தில் இருக்கிறது அந்த இடத்தைப் புள்ளி வைத்து அங்கிருந்து தாக்கினால் சரியாக அங்கு சென்று தாக்கக்கூடிய பிரிசிஷன் பாமிங் என்ற அந்த குண்டு வீச்சு முறை, அதற்கான கருவி, அதை இயக்குவதற்கான வான் படை ஆள், இது எல்லாமே பாகிஸ்தானில் இருந்துதான் வரவழைக்கப்பட்டது. அந்த வான் படை ஆளைக் கொண்டுதான், அந்த முறையில்தான், சமாதானச் செயலகம் கிளிநொச்சியில் எங்கிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த இடத்தை குறிபோட்டு தமிழ்ச்செல்வனைக் கொன்றார்கள். அதுதான் அந்தப் போரில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது நமக்குத் தெரியும். தமிழ்ச்செல்வனைக் கொன்றது அப்படித்தான். அதற்கு இந்த பசில்தான் போய் பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் கருவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார். அதேபோல், புதுக்குடியிருப்பில் போய் கடுமையாக இவர்கள் சிக்கிக் கொண்டிருந்த போதுதான் மீண்டும் பசில் அங்கு போனார். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர் அங்கு போய்தான், அதற்கான கருவிகள், மற்ற வழிமுறைகள், பாகிஸ்தானிய இராணுவ உதவிகளையெல்லாம் பெற்றுக் கொண்டு வந்தார். சீன டாங்கிகளும், பாகிஸ்தானிய விமானங்களும், இந்திய ராடார்களும், மூன்று நாடுகளுடைய இராணுவ அறிவுரைகளும், இதோடு ஈரான் மற்ற சில நாடுகளையெல்லாம் இணைத்துக் கொண்டுதான் இந்தப் போரை அவர்கள் நடத்தினார்கள். இதற்காகத்தான் அவர்கள் டில்லிக்கு வந்தார்கள். இந்த கொலைத் திட்டத்தை, சதித்திட்டத்தை மறைப்பதற்காகத்தான் இந்த 13வது திருத்தம், இராணுவம் பாசறைக்கு போய்விட வேண்டும் என்று சொல்வதும், அப்படியே இந்தியா மிரட்டியது போல் பேசியது போலவும், இல்லையென்றால் நாங்கள் வந்து தலையிடுவோம். எப்ப தலையிடுவது? தலையிடுவதற்கான நேரம் இதுவா? கடைசி காலத்தில் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டு வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளால் எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கிறது, இந்த உலகத்திற்கு கண்ணில்லையா? காதில்லையா? இதை தடுப்பதற்கு யாராவது வரமாட்டார்களா என்று கதறிக் கொண்டிருந்தார்கள்.
செஞ்சிலுவைச் சங்கம் கப்பலைக் கொண்டு போய் கடலோரத்தில் நிறுத்திக் கொண்டு, உணவை கொண்டுபோய் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள், நோயாளிகளை ஏற்றி வருவதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சொன்னார்கள். முள்ளிவாய்க்காலில் கடைசியாக மிச்சமிருந்த அந்த மரத்தடி மருத்துவமனை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் பீரங்கிக் குண்டுகளால் தாக்கி அடியோடு தகர்த்தார்கள். செஞ்சிலுவைச் சங்கமே சொல்லியது, சிங்கள இராணுவம்தான் இந்த தாக்குதலை நடத்துகிறது,
பீரங்கிக் குண்டுகளால் தாக்குகிறார்கள், கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு தாக்குகிறார்கள் என்ற போதெல்லாம் தலையிடாத இந்தியா, இப்போ போய் நான் தலையிடுவேன் என்று மிரட்டியதாம்! இராஜரீகமாக பேசினார்களாம். சொல்கிறார்கள். உதவி செய்வதற்கு நாங்களே வந்துவிடுவோம் என்று சொன்னார்களாம். அதெல்லாம் தேவையில்லை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்களாம். உண்மையிலேயே தமிழர்களுக்கு சமத்துவ உரிமை கொடுப்பது என்றால், சிங்களவனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்கிற மாதிரி, தமிழனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்குமா? என்று கேட்டார்களா? சிங்களவர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பது போல, தமிழர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பாரா? என்று கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு படை இருப்பது போல், தமிழர்களுக்கு ஒரு படை இருக்க வேண்டும் என்று கேட்டார்களா? எதுவுமே இல்லாம சமத்துவம் என்பது, அப்ப என்ன அர்த்தத்தில் சமத்துவம்? எனவே இது எல்லாமே ஏமாற்று, மோசடி. நாம் வரிகளைப் படித்தால் மட்டுமே போதாது, வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிற உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இப்படிப்பட்ட மகா யோக்கியர்கள் கூடிப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ தமிழர் நலன் பற்றி பேசுவார்கள் என்று யாரும் கனவிலும் நினைக்க வேண்டாம்.
மீண்டும் சூழ்ச்சித் திட்டங்கள் டில்லிக்கும், கொழும்பிற்கும் இடையே உருவாக்கப்படுகின்றன. அவற்றை முறியடிப்பதற்கு தமிழர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அந்த விழிப்பின் அடையாளமாக போர்க் குற்றவாளிகளாக சிங்கள அரசுத் தலைவர்களையும், இந்திய அரசுத் தலைவர்களையும் உலக நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அந்த அகதி முகாம்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை அவரவர் சொந்த ஊரிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.
இதையெல்லாம் இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதோ, அது வலியுறுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பதோ அர்த்தமற்றது. இதுதான் இதிலிருந்து நமக்கு தெரியக்கூடிய செய்தி.
நன்றி: தமிழ்.வெப்துனியா.கொம்