Sunday, March 25, 2012

செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை

people_259உன்னுடைய கேலிச் சித்திரத்தில்
அவனுடைய கடவுள் ஒரு பெண்னோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
அவனுடைய கேலிச் சித்திரத்தில்
உன்னுடைய பெண் கடவுள் நிர்வாணமாயிருக்கிறார்.
கருத்துச் சுதந்திரத்தின் சமுத்திர அலைகள்
கேலிச் சித்திரத்தின் கரைமீது மோதி சிதறுகிறது.
கரையில் ஒதுங்கும் பிணங்களில்
கடவுளின் அடையாளம் தேடி ஓடுகிறாய்
கையிலிருக்கும் காற்றை கடவுளின்
மூக்கில் செருக முயற்சிக்கிறாய்.
காற்றை உறிஞ்சும் கடவுள்கள்
நெடுங்காலம் பூமியில் உயிரோடிருப்பதில்லை.
எதிராளியிடம் கேட்கிறாய் உன் கடவுளால் வெறிநாய் கடிக்கு
மருந்து கண்டுபிடிக்க முடிந்ததாவென்று
அவன் திருப்பிக் கேட்கிறான்
உன்னுடைய கடவுள் மட்டும்
மின்சாரபல்பை கண்டு பிடித்தாரவென்று...
கடவுள்களை பூமியிலிருந்து வெளியேற்ற முடியாது.
மலைகளைப்போல வேர்பிடித்து விட்டார்கள்.
அவர்களுக்கு வேறுபோக்கிடம் கிடையாது.
அவர்களால் சனிக் கோள்களில் வசிக்க முடியாது.
சுயம்புவாக தோன்ற முடியாது.
செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை.
ஏனெனில் அங்கே மனிதர்களில்லை.

- கோசின்

No comments:

Post a Comment