Tuesday, November 1, 2011

jkpo; ,dj;jpd; jkpodpd; mwpitf; fz;L gae;j cyfk;!!!
புலிகள் உருவாக்கிய "ரோப்பிடோ" ஏவுகணைகள் அயல் நாடுகள் அச்சத்தில் மூழ்கியதா ?




விடுதலைப் புலிகள் சமாதான காலகட்டத்திலும் அதற்கு பிந்திய நிலையிலும் ஆயுதப் பற்றாக்குறை காரணமாக அவர்களே ஆயுதங்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பல நீர் மூழ்கிக் கப்பல்களையும் மற்றும் கடலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளையும் அவர்கள் தயாரித்திருந்தனர். நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கடலுக்கு அடியில் இருந்து ஏவப்படும் ரோப்பிடோ என்று அழைக்கப்படும் ஏவுகணைகள் போல நிலத்தில்(அதாவது கடற்கரைகளில்) இருந்து ஏவக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை விடுதலைப் புலிகள் தாமே தயாரித்திருந்தனர். சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட இவ்வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி புலிகள் இலங்கை கடற்படையின் சில டோறாப்படகுகளை மூழ்கடித்தும் உள்ளனர்.




ஆயுதங்களை மாற்றுவதும் அவற்றை மேலும் மேம்படுத்தி அதிசக்திவாய்ந்ததாக மாற்றுவதில் புலிகளுக்கு நிகர் புலிகளே தான் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயர் அதிகாரி ஒருவர். முல்லைத்தீவுக் கடற்பரப்பில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் வைத்தே புலிகள் தமது கடல் தாக்குதல் படகுகளையும் மற்றும் ஏவுகணைகளையும் தயாரித்து வந்தனர் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். தாம் தயாரித்த ஏவுகணைகளை நீருக்கு அடியில் செலுத்தவும் ஏவுகணைகளை தயாரிப்பு நிலையங்களில் இருந்து கடற்கரைக்கு கொண்டுவரவும் அவர்கள் பிரத்தியேக வசதிகளைச் செய்துவைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இந்த ரோப்பிடோ ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது. மற்றும் அதில் அதி தொழில்நுட்ப வசதிகளும் பொருத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகள் தயாரித்த சிலவகையான நீர் மூழ்கி ஏவுகணைகள் துல்லியமாக இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தது என்றும் ஒரு முறை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான டோராப் படகு ஒன்று அதிஷ்டவசமாக தப்பியதை அடுத்து அதனை காங்கேசன் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று கடற்படையினர் ஆராய்ந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகள் காங்கேசன் துறைமுகம் சென்று அத்தாக்குதல் படகை ஆராய்ந்தவேளையே அப்படகு ரோப்பிடோ மூலம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட இலங்கையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போலவே விடுதலைப் புலிகள் சாதாரண சிலின் ரக விமானத்தைக் கொள்வனவு செய்து அதனை வன்னிக்கு எடுத்துச் சென்ற பின்னரே அதனை போர் விமானமாக மாற்றியுள்ளனர்.

(அதற்கான ஆதாரப் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)








விடுதலைப் புலிகள் சமாதான காலகட்டத்திலும் அதற்கு பிந்திய நிலையிலும் ஆயுதப் பற்றாக்குறை காரணமாக அவர்களே ஆயுதங்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பல நீர் மூழ்கிக் கப்பல்களையும் மற்றும் கடலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளையும் அவர்கள் தயாரித்திருந்தனர். நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கடலுக்கு அடியில் இருந்து ஏவப்படும் ரோப்பிடோ என்று அழைக்கப்படும் ஏவுகணைகள் போல நிலத்தில்(அதாவது கடற்கரைகளில்) இருந்து ஏவக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை விடுதலைப் புலிகள் தாமே தயாரித்திருந்தனர். சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட இவ்வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி புலிகள் இலங்கை கடற்படையின் சில டோறாப்படகுகளை மூழ்கடித்தும் உள்ளனர்.



ஆயுதங்களை மாற்றுவதும் அவற்றை மேலும் மேம்படுத்தி அதிசக்திவாய்ந்ததாக மாற்றுவதில் புலிகளுக்கு நிகர் புலிகளே தான் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயர் அதிகாரி ஒருவர். முல்லைத்தீவுக் கடற்பரப்பில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் வைத்தே புலிகள் தமது கடல் தாக்குதல் படகுகளையும் மற்றும் ஏவுகணைகளையும் தயாரித்து வந்தனர் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். தாம் தயாரித்த ஏவுகணைகளை நீருக்கு அடியில் செலுத்தவும் ஏவுகணைகளை தயாரிப்பு நிலையங்களில் இருந்து கடற்கரைக்கு கொண்டுவரவும் அவர்கள் பிரத்தியேக வசதிகளைச் செய்துவைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இந்த ரோப்பிடோ ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது. மற்றும் அதில் அதி தொழில்நுட்ப வசதிகளும் பொருத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகள் தயாரித்த சிலவகையான நீர் மூழ்கி ஏவுகணைகள் துல்லியமாக இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தது என்றும் ஒரு முறை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான டோராப் படகு ஒன்று அதிஷ்டவசமாக தப்பியதை அடுத்து அதனை காங்கேசன் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று கடற்படையினர் ஆராய்ந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகள் காங்கேசன் துறைமுகம் சென்று அத்தாக்குதல் படகை ஆராய்ந்தவேளையே அப்படகு ரோப்பிடோ மூலம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட இலங்கையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போலவே விடுதலைப் புலிகள் சாதாரண சிலின் ரக விமானத்தைக் கொள்வனவு செய்து அதனை வன்னிக்கு எடுத்துச் சென்ற பின்னரே அதனை போர் விமானமாக மாற்றியுள்ளனர்.

(அதற்கான ஆதாரப் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது).




No comments:

Post a Comment