Wednesday, August 12, 2009

தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உளவியல் பார்வை...

பொதுவாக எல்லா இனத்துக்கும் சூடு சொரனை இருக்கின்றது அது சற்றே மங்கிபோய் பெருமளவு அலட்சியத்துடன் இருக்கும் ஒரே இனம் தமிழ் இனம்தான்.அதற்க்கு காரணம் என்ன என்பதை அலசுவோம்.

தாய் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கு இடப்பெயர்வு நடத்தியது போலதான் பல்வேறு சமுகத்து மக்களும் சென்றார்கள், ஆனால் தமிழன் வித்யாசமானவன். அவன் புத்திசாலி, கடுமையான உழைப்பாளி. பல சமுகத்தினர் புத்திசாலி மற்றும் உழைப்பு இல்லை என்றாலும் ஒற்றுமையானவர்கள். அதனால் மற்ற சமுதாய மக்கள் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அவர்களின் ஒற்றுமையால் சேதாரம் குறைவாக இருக்கின்றது. ஒற்றுமையின்மையால் தமிழனுக்கு சேதாரம் அதிகமாக இருக்கின்றது.

தாய் தமிழர்களான நாம் இலங்கையில் நம் இனம் கொத்து கொத்தாக இறந்த போது நாம் என்ன செய்தோம். உலக அளவில் சர்வதேச சமுக மக்களை நம் பக்கம் பார்க்க ஏதாவது செய்தோமா? அல்லது வட இந்திய மக்களுக்காகவாவது நமது பிரச்சனைகளை புரிய வைத்தோமா? ஏதும் இல்லை....சொரனையற்ற சமுகமாகவே தாய் தமிழக மக்கள் இப்படி இருக்க என்ன காரணம், இந்த மனோபாவம் எப்படி வந்தது?.

பிரபாகரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாஸ்பரஸ் கு்ண்டு போட்டு கொண்று விட்டார்கள் என்று சொல்லியும், “எவ்வளவோ பாத்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?” என்பதான மனநிலையில்தான் தாய் தமிழகத்தினர் இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் கீழே....

1. கடந்த 300 வருடங்களாக தமிழகத்தில் வாழும் நம் மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள், சற்றே யோசித்தால் சுதந்திர போராட்டத்தில்ஒரு சில போராட்டங்களை தவிர பெரிய உயிரிழப்புகள் வட இந்தியாவில் மட்டுமே. மொகலாய படையெடுப்பு உயிர் இழப்புகள்உட்பட.

2.தனுஷ்கோடி கடல் கோள் அழிவு மற்றும் சுனாமி அழிவை தவிர பெரிய பேரழிவுகளை தாய் தமிழன் சந்தித்தது இல்லை.

3. கொள்ளை நோய்கள் அவ்வப்போது எட்டிபார்த்தாலும் அது பெரிய அளவு இழப்புகளை தமிழகம் சந்தித்தது இல்லை.

4.பசி, பட்டினி என்று சோத்துக்காக சோமாலிய மக்கள் போல் குடும்ப்த்துடன் ஒடியது இல்லை.

5.வாடகைவீட்டில் காலி செய்வதையே அலுத்துக்கொண்டு மற்ற இடத்துக்கு குடும்பத்துடன் இடப்பெயர்வு செய்யும் போது கட்டிய துணியுடன் இலங்கை தமிழர்கள் ஆர்மிகாரர்களால் சொந்த வீட்டை விட்டு வெளியேற்றிய அனுபவங்களை தாய் தமிழன் அனுபவித்து இல்லை.

6. மற்ற தேசங்களை போன்று போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வு அதனால் ஏற்ப்ட்ட வலிகள் திரைப்படம் மூலமே தாய் தமிழன் உணர்ந்து இருக்கிறான்.(உம்/ஜெர்மன்,ரஷ்யா போரினால் துன்புற்ற மக்கள்),

7. நம்ம இனத்தில்தான் அதிகமான எட்டப்ப தேவிடியா பையன்கள் இருப்பார்கள்.

8.நாஜீகளினால் யூதர்களுக்கு நடந்த கொடுமையை சத்தியம் தியேட்டர் லாபியில் இந்து பத்திரிக்கை படித்துக்கொண்டு ஸ்பீல் பெர்க்கின் ஷீன்டலர் லிஸ்ட் பார்த்தே போரினால் ஏற்படும் வலிகளை தாய் தமிழன் அறிந்து இருக்கிறான்.

9.ஒரு தீப்பெட்டி 250ரூபாய் கொடுத்து வாங்கிய அனுபவம் அவனக்கு கிடையாது.

10.சாலை விபத்துகளில் மட்டுமே தாய் தமிழன் முகம் சிதைந்த உடல்களை பார்த்து இருக்கிறான். ஆர்மிக்கரார்களால் பிடித்து செல்லப்பட்ட சகோதரன் சகோதரி முகம் சிதைந்து செத்து்ப்போன உடலை பார்த்த அனுபவம் அவனுக்கு இல்லவே இல்லை.

11.தன் கண் எதிரே ஆர்மீக்காரர்களால் தன் அக்கா தங்கையின் அடையில்லாத மார்பில் கை வைத்து பிறகு உடல் எங்கும் கைவைத்து விளையாடி கெடுத்து கற்பழிக்கும் கொடுமையை எந்த தாய் தமிழனாவது அனுபவித்து இருக்கின்றானா?

12.துப்பாக்கி முனையில் உடன் பிறந்த சகோதரியை உறவு கொண்ட அனுபவம் எந்த தாய் தமிழனுக்காகவாவது இருக்கின்றதா?

13.தமிழகத்தில் ஊரடங்கு உத்திரவை நாம் அனுபவித்தது எப்போது????

14. சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ஷெல் அடிக்கும் சத்தம் கேட்டு , சாப்பிட்ட கையோடு
பதுங்கு குழியில் போய் குடும்பத்துடன் மூச்சு முட்ட உயிர்பயத்துடன் வாழ்ந்த அனுபவம் நம் எவருக்கேனும் இருக்கின்றதா? நாம் நன்றாக சப்புக்கொட்டி சாப்பிட்டபடி மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருப்போம், அல்லது ஜெயா டிவியில் கயவன் கருனாநிதி என்று அம்மா தொடுக்கும் அறிக்கை போரை பார்த்து ரசித்துக்கொண்டு இருப்போம்.

15.நம்மில் யாருக்காவது குடும்பத்துடன் காட்டில் வாழ்ந்த ஆனுபவம் இருக்கின்றதா?

16.பஸ்சில் பயணம் செய்யும் போது யாராவது பிள்ளைதாச்சி வந்தால் எழுந்து சீட் கொடுக்கும் நாம் அவள் வயிறு கிழிந்து ரத்த சகதியின் ஊடே இறந்து போன பிள்ளையை பார்த்து இருக்கின்றோமா?

17. பிள்ளைகள் வெவ்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து, அப்பா அம்மாக்கள் போர் மேகச்சூழலில் சிக்கி தினம் தினம் இன்டெர்நெட்டில் இறந்தவர் பட்டியலில் தன் உறவு பெயர் இருக்கின்றதா? என்று திக் திக் இதயத்துடன் பார்த்து தினம் தினம் செத்து செத்து அனுபவிக்கும் கொடுமையை அனுபவித்தது உண்டா?

18 முளைத்து மூனு இலைவிடாத பிள்ளைகளின் எல் கே ஜீ சீட்டுக்கு 40,000 பணம்கட்ட இரவு முழுவதும் காத்து இருக்கும் தாய் தமிழன் போரினால் ஒரு தலைமுறையே கல்வி கற்றகாத ஒரு சூழலை நினைத்து பார்த்து இருப்பானா?

19. உங்கள் பிள்ளை அல்லது உங்கள் தகப்பன் தலையில் குண்டு காயத்துடன் இறந்த பினத்தையும் உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடுரமாக கொண்று கொண்டு வந்த போட்ட உறவுகளை வாயில் அடித்து கதறி பார்த்து இருக்கின்றீர்களா?

20. மிக முக்கியமா நீங்கள் போற்றி பாதுகாத்து வந்த நூலகம் என்றாவது உங்கள் கண் எதிரில் தீக்கிரை ஆனதுன்டா???
நான் எழுதியது ஒரு சிலதான் இன்னும் எழுதினால் வலைபக்கத்தில் இடம் போதாது. இது போன்ற எந்த பாரிய இழப்புகளையும் சந்திக்காத தாய்தமிழனிடம் ,இன உணர்வு சொரனை,விடுதலை, வேட்கை, இன்ன பிற நான்சென்ஸ் விஷயங்களை தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள், மிக முக்கியமாக தாய் தமிழனை நம்பாதீர்கள். மேலே நான் சொன்ன விஷயங்கள் தாய்தமிழனுக்கு நடக்க வேண்டும் என்று கங்கன்ம் கட்டிக்கொண்டு எழுதியது அல்ல. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இரு் என்பதே. இந்த பதிவு பிரச்சனையின் வீரியம் தாய் தமிழனுக்கு புரியவில்லை என்பதே எவர் மீது தவறு என்று அலசுவது நம் நோக்கம் அல்ல...

இவ்வளவு நடந்தும் ஏதும் நடக்காதது போல வாழ தமிழனால் மட்டும்தான் முடியும்.-- ---------------

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவேகுகை
வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

No comments:

Post a Comment